ETV Bharat / state

மாமல்லபுரத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர உத்தரவு

author img

By

Published : Sep 4, 2019, 3:26 PM IST

சென்னை: சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆறு வாரத்தில் ஏற்படுத்தி தர காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

clean mamallapuram tourist spot says chennai high court

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கிட்டு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "உலக பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில், பல்வேறு இடங்களில் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை.

இதனால், அடிக்கடி வாகன திருட்டு நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாரயணன், சேசஷாயி அமர்வு, மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான உரிய வசதிகள் செய்து தரப்படாததற்கான காரணங்கள் என்ன? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரரின் புகார் குறித்து ஆறு வாரத்திற்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.


Intro:Body:சுற்றுலாத்தளமான மாமல்லபுரத்தில் பயணிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 6 வாரத்தில் ஏற்படுத்தி தர காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கிட்டு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமான மாமல்லபுரத்திற்கு செல்லும்போது நுழைவுக்கட்டணம் பல்வேறு இடங்களில் தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது.

நுழைவு கட்டணம் வசூலித்தாலும் அதற்கான அடிப்படை வசதிகளான, வாகன நிறுத்துமிடம், கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், அடிக்கடி வாகன திருட்டு நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாரயணன், சேசஷாயி அமர்வு ஏன் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும்,
மனுதாரரின் புகார் குறித்து 6 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

அடுத்த வாரம் சீன பிரதமர் மற்றும் இந்திய பிரதமர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.