ETV Bharat / state

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 100 மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்!

author img

By

Published : Nov 20, 2019, 1:48 AM IST

சென்னை: காற்று மாசு ஏற்பட்டு வரும் நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

children-planted-saplings-in-chennai

ஒவ்வொரு தீபாவளியின்போதும் காற்றுமாசு ஏற்படுவதை பற்றி சில பேச்சுகள் அடிப்படும். ஆனால் இம்முறை தீபாவளி பண்டிகை முடிவடைந்ததையடுத்து, காற்று மாசு மட்டுமே நாடு முழுவதும் முக்கிய பேசுபொருளாக இருந்தது. அதிலும் சென்னையில் வீசும் காற்று, மக்களின் சுவாசித்திற்கு உகந்தது அல்ல என ஆய்வுகள் கூறின. இதனால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் கூறினாலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

100 மரக்கன்றுகளை நட்ட சிறுவர்கள்

இந்த காற்றுமாசுவைக் கட்டுப்படுத்த அரசும், தன்னார்வளர்களும் முயன்று வருகின்றனர். இந்தநிலையில் சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் சி.எஸ்.ஐ ஆலயம் சார்பாக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுசூழல் பாதுகாக்கவும் வருங்கால தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவர்கள் 100க்கும் மேற்பட்ட வேப்ப மரம், அரச மரம், தேக்கு உள்பட 100க்கும் அதிகமான மரக்கன்றுகளை ஆலய வளாகத்தில் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: விசிக கொடிக் கம்பத்தில் செருப்பை தொங்கவிட்ட அடையாளம் தெரியாத நபர்கள்!

Intro:சென்னையில் காற்று மாசு ஏற்பட்டு வரும் நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 100கும் மேற்பட்ட சிறுவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்Body:சென்னையில் காற்று மாசு ஏற்பட்டு வரும் நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 100கும் மேற்பட்ட சிறுவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகின்றது.இதனை கட்டுப்படுத்த அரசும் தன்னார்வளர்களும் முயன்று வருகின்றனர். இந்தநிலையில் சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் சி.எஸ்.ஐ ஆலயம் சார்பாக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வருங்கால தலைமுறையினருக்கு இயற்கையை பாதுகாத்து, சுற்றுசூழல் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். பங்கேற்ற 100கும் மேற்பட்ட குழந்தைகள் வேப்ப மரம்,அரச மரம் தேக்கு உள்பட 100கும் அதிகமானமரக்கன்றுகளை ஆலய வளாகத்தில் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.