சென்னை ஆவடி அருகே வேல் டெக் பல்கலைகழகத்தில் தன்னியக்க தொழில்துறை சமூகம் சார்பில் ஆறு, ஏழு, எட்டு ஆகிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான 12ஆவது தேசிய ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் இந்தியா முழுதும் 40 நகரங்களிலிருந்து 525 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு வான்வழி, தரைவழி, நீர்வழி என இயங்கு விசையில் இயக்கக்கூடிய வாகனங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் திறமைகளுக்கு ஏற்ப பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதனையடுத்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாயுடன் சான்றிதழையும், பிர்லா கோளரங்கம் நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ பெருமாள் வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க...நாடு சந்திக்கும் சுகாதாரத் துறை பிரச்னைகள்.!