ETV Bharat / state

'சதுரங்க வேட்டை' பாணியில் பலே திட்டம்.. 4 பேரை கைது செய்த போலீஸ்.. சென்னையில் நடந்தது என்ன?

author img

By

Published : May 6, 2023, 1:50 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை கோயம்பேட்டில் போலி கைத்துப்பாக்கி, குண்டுகள் மற்றும் நிர்வாணமாக தெரியும் கண்ணாடிகள், ரைஸ் புல்லிங் கலசத்துடன் பதுங்கி இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேகத்திற்குரிய சில நபர்கள் அறையில் தங்கி இருப்பதாக சி.எம்.பி.டி(CMBT) போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் போலீசார் அறையில் தங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்து விடுதி அறையில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்களிடமிருந்து போலியான ஒரு கை துப்பாக்கி மற்றும் எட்டு தோட்டாக்கள், கை விலங்கு, லீடிங் செயின் மற்றும் கோபுர கலசத்திற்கு ரைஸ் புல்லிங் கலச செம்பு, கருப்பு அரிசி 50 கிராம், மற்றும் போலி அடையாள அட்டைகள், நிர்வாணமாக தெரியக்கூடிய போலி கண்ணாடிகள் ஆகியவற்றை அந்த நான்கு நபர்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் நான்கு நபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெங்களூரை சேர்ந்த சிவா, கேரளாவை சேர்ந்த குபய்ப், ஜித்து, இர்ஷாத் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் ரைஸ் புல்லிங் கலசம் என போலியானதை விற்று யாரையோ ஏமாற்ற வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இயக்குனர் விக்ரமன் வீட்டில் பைக் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.