ETV Bharat / state

’கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : May 24, 2021, 4:52 PM IST

Met
Met

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக இன்று (மே.24) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, "வெப்பச்சலனம் காரணமாக இன்று (மே.24) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பொதுவான அறிவிப்பு

25.05.2021, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

26.05.2021 மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வட தமிழ்நாட்டில் தரைக்காற்று பலமாகவும் இடைஇடையே சூறைக்காற்றாகவும் வீசக்கூடும்.

27.05.2021, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28.05.2021: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 5, மேல் பவானி (நீலகிரி) 4, சின்னக்கல்லார் (கோவை), குழித்துறை (கன்னியாகுமரி) தலா 3, ஓகேனக்கல் (தர்மபுரி), குன்னூர் (நீலகிரி) தலா 2, டேனிஷ்பேட்டை (சேலம் ), வால்பாறை (கோவை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

24.05.20212 முதல் 27.05.2021 : தமிழ்நாடு கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.05.2021,25.05.2021 மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65-75 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25.05.2021: வடக்கு வங்கக் கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.05.2021: வடக்கு வங்கக் கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.05.20212 முதல் 28.05.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 'யாஸ்' புயல் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வலுப்பெற்ற 'யாஸ்' புயல்

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (மே.24) காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. 'யாஸ்' என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து மே 26 ஆம் தேதி பிற்பகல் பாரதீப்-சாகர் தீவுக்கு இடையே கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.