ETV Bharat / state

தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் இடமாறுதலுக்கு ஒப்புதல்

author img

By

Published : Mar 18, 2022, 7:46 AM IST

தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் இடமாறுதலுக்கு ஒப்புதல் அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வனம் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளது.

தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் இடமாற்றம் - நீதிமன்றம் உத்தரவு
தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் இடமாற்றம் - நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காட்டு யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கு உள்ளிட்ட வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணையின் போது, நீதிமன்றத்துக்கு உதவியாக இருக்கும் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சொந்த விருப்பத்தினால் தான் இடமாற்றம்

இதையடுத்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் பரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இடமாற்றம் கோரியதாகவும், அவரை இடமாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டதால் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

வழக்கு ஒத்திவைப்பு

மேலும், அவர் இடமாற்றம் செய்யப்பட்டாலும், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், அலுவலரை இடமாற்றம் செய்வது என்பது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முதன்மை வனப்பாதுகாவலரின் இட மாறுதலுக்கு ஒப்புதல் அளித்த நீதிபதிகள், தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வன குற்றங்கள்,மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில் அவர் உதவி செய்யுமாறு உத்தரவிட்டு, அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பாக வனத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:இலங்கைக்கு சுமார் ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.