சிறுமி பாலியல் வழக்கு - எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!

author img

By

Published : Sep 19, 2021, 6:30 AM IST

சிறுமி பாலியல் வழக்கு

புதுவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் சம்பவத்தில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை வா.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் பூபாலன் (29). இவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். வீட்டின் உரிமையாளரின் ஐந்து வயது மகளை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் பூபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பூபாலன்
பூபாலன்

இந்த வழக்கின் சாட்சிகள் அடிப்படையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தன.

இந்நிலையில் 8 ஆண்டுகளாக நடைப்பெற்ற இந்த வழக்கு விசாரணையில், தற்போது பூபாலன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராத தொகையும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் செல்போன் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.