ETV Bharat / state

போக்குவரத்துத் துறை ஊழியரின் வீட்டில் 15 சவரன் தங்க நகை கொள்ளை

author img

By

Published : Jun 9, 2019, 8:28 AM IST

சென்னை: பட்டாபிராமில் அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியரின் வீட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை, ரூ. 3 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

போக்குவரத்து துறை ஊழியரின் வீட்டில் 15 சவரண் தங்க நகை கொள்ளை

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் மாடர்ன் சிட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், அரசுப் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். இவர், கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்துடன் சிவகங்கைக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

இதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை, மூன்று லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

போக்குவரத்து துறை ஊழியரின் வீட்டில் 15 சவரண் தங்க நகை கொள்ளை

இதையடுத்து, இன்று காலை தனது வீட்டிற்கு வந்த செல்வகுமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

சென்னை பட்டாபிராமில் அரசு போக்குவரத்து துறை ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் மூன்று லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.



சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் மாடர்ன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்துடன் சிவகங்கைக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார் இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் மூன்று லட்ச பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று காலை வீட்டிற்கு வந்த செல்வகுமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் பீரோவில் வைத்திருந்த நகை பணம் கொள்ளை போனதை அறிந்த செல்வகுமார் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கை ரேகை கைரேகை நிபுணர்கள் உதவியுடன்  மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.