ETV Bharat / state

நடிகை மீரா மிதுன் மிஸ்ஸிங்? லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்!

author img

By

Published : Nov 14, 2022, 3:22 PM IST

Updated : Nov 14, 2022, 3:38 PM IST

நடிகை மீரா மிதுனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை மீரா மிதுன் மிஸ்ஸிங்? லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்!
நடிகை மீரா மிதுன் மிஸ்ஸிங்? லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்!

நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு பட்டியலினத்தோரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகையான மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சியாம் அபிஷேக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இருவரும் ஜாமின் பெற்ற நிலையில், இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெற்றது. அப்போது விசாரணைக்கு நடிகை மீரா மிதுன் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அப்போது மீரா மீதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் முதன்மை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை லுக் அவுட் கொடுக்க இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக மீரா மிதுனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் சியமாளா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Nov 14, 2022, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.