ETV Bharat / state

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஊதியம் வழங்க உத்தரவு

author img

By

Published : Nov 17, 2021, 9:43 AM IST

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஊதியம் வழங்க உத்தரவு
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஊதியம் வழங்க உத்தரவு

பாலியல் புகாரால் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல்செய்த வழக்கில் தமிழ்நாடு அரசு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி இடைநீக்கம்செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்புச் சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது.

விசாகா விசாரணைக் குழு ஒருதலைபட்சமானது

அந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது இடைநீக்க உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், தனக்கு எதிரான விசாகா விசாரணைக் குழு ஒருதலைபட்சமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், தானாக முன்வந்து வழக்கை விசாரித்துவந்ததை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊதிய தொகையை வழங்க வேண்டும்

ஊதிய தொகையை வழங்க வேண்டும்
ஊதிய தொகையை வழங்க வேண்டும்

இடைநீக்க கால ஐம்பது விழுக்காடு ஊதிய தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், அதைத் தமிழ்நாடு அரசு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாய உறுப்பினர் மோரி, வழக்கு குறித்து நான்கு வாரத்திற்குள் தமிழ்நாடு உள் துறைச் செயலர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், இடைநீக்க கால ஊதிய தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்

இதற்கிடையே விழுப்புரம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை முழுமையாகப் படிப்பதற்கு அவகாசம் தராமல், தனக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியம்- ஜீன் டிரேஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.