ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு

author img

By

Published : Jul 24, 2022, 5:52 PM IST

கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு
கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு

கடந்த ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கூடிய சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 50 காவல்துறை அதிகாரிகளை சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் சைபர் கிரைம் நிபுணர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவையும் சேர்த்துள்ளனர். இவர்களின் முக்கிய பணிகள் கலவரம் நடைபெற்ற கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கணியாமூர் தனியார் பள்ளியை சுற்றி எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது..?

மேலும், எத்தனை டவர் கம்பங்கள் உள்ளது..? என்பதை சேகரித்து அதன் மூலம் அவர்கள் யாரிடம் பேசினார்கள்..?,என்ன மாதிரி செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்..? போன்ற தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் இருந்து நட்சத்திர விடுதிக்கு சென்ற ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.