ETV Bharat / state

கப்பல் பொறியாளரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : Sep 21, 2020, 4:16 PM IST

திவ்யா
திவ்யா

சென்னை:தனியார் கப்பலில் பொறியாளராக பணியாற்றி வந்தவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

சென்னை பல்லாவரம் அருகே நாகல்கேணி பெரியார் நகா், டில்லி தெருவில் வசிப்பவர் ஜெயசந்திரன் (38). இவருடைய மனைவி திவ்யா(35). இவர்களுக்கு 7 வயது மகள், 4 வயது மகன் உள்ளனர். ஜெயசந்திரன் தனியார் கப்பலில் பொறியாளராக பணியாற்றிவந்தார்.

இதற்கிடையில் கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 2 மாதங்களாக இவருக்கு வேலை இல்லை. இதனால் மனைவி திவ்யா எம்,காம் பட்டதாரி என்பதால் அவரை எதாவது வேலைக்கு அனுப்ப ஜெயசந்திரன் முயற்சித்தாா். திவ்யாவிற்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்று(செப்.20) இரவும் இவர்களுக்குள் இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒரு மணி ஆகியும் திவ்யா படுக்கை அறையிலிருந்து வெளியேவராத காரணத்தினால் சந்தேகமடைந்த கணவர் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது, திவ்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனே கயிற்றை அறுத்து அவரை காப்பாற்ற முயன்று, அவசர அவசரமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜெயச்சந்திரன் அழைத்து சென்றார். அங்கு திவ்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து சங்கா்நகா் காவல் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று திவ்யாவின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.