ETV Bharat / state

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!

author img

By

Published : Aug 1, 2023, 4:15 PM IST

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!
கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில் ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்து உள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 29ம் தேதி பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் வேலை பார்த்து வந்த 9 பேர் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பட்டாசு குடோன் அமைப்பதற்கான முறையான விதிமுறைகளும், பாதுகாப்பும் இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் பட்டாசு குடோன் அருகில் செயல்பட்டு வந்த ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இதுசம்பந்தமாக ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமின்: காவல்துறையின் கஸ்டடி மனுவுக்கு முகாந்திரம் இல்லை என உத்தரவிட்ட நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.