ETV Bharat / state

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு ரத்து

author img

By

Published : Jul 20, 2023, 3:24 PM IST

நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி உள்ளிட்டோர் திருநெல்வேலி ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஒப்பந்த பத்திரப்பதிவு மோசடி ஆவணம் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு ஆணையிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Nainar Balaji
நயினார் பாலாஜி

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு ரத்து

சென்னை: அறப்போர் இயக்கம் புகாரில் பாஜக MLA நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி செய்த 100 கோடி மதிப்பிலான ஒப்பந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியுள்ளதாவது, "பத்திரப்பதிவு துறையில் நில மாஃபியா, MLA நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய்த் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆற்காடு ரோடில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி சொத்தை ராதாபுரம் சார்பதிவாளர் ஆவண எண் 4278/ 2022 மூலம் மோசடி ஒப்பந்த பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமைச் செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு 2023 ஏப்ரல் 12-ம் தேதி அனுப்பி இருந்தோம்.

இந்தப் புகாரை விசாரித்த திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர், ஆணை ந.க.எண்.725/உ/2023 நாள் 25.05.2023ன் மூலம் ராதாபுரம் சார்பதிவகம் 4278/2022 ஆனது ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் எனத் தெரிவித்துள்ளார். இது தற்பொழுது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 13.06.2023 அன்று அறப்போர் இயக்கம் அளித்தப் புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு உள்துறை, சென்னை காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இதையும் படிங்க: Manipur Violence: பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

பத்திரப்பதிவு துறையில் அறப்போர் இயக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல், பரந்தூர் நில ஊழல், PACL நில மோசடி ஊழல், திருச்சி ஜெஜெ கல்லூரி நிலத்தை மோசடியாக காஞ்சிபுரத்தில் பத்திரப்பதிவு செய்த மோசடி, ஜெஜெ கல்லூரி 15.04 ஏக்கர் நீர்நிலையைப் பதிவு செய்த மோசடி மற்றும் BJP MLA நயினார் நாகேந்திரனின் மகன் செய்த 100 கோடி மதிப்பு சென்னை நிலத்தை ராதாபுரத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது எனப் பல புகார்கள் கொடுத்து உள்ளோம். கடந்த 10-ம் தேதி இதன் அனைத்தின் மீதும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேகப்படுத்த வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது என மனு அளித்திருந்தது.

பாஜக MLA நயினார் நாகரேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்னும் நபர் மற்றும் ராதாபுரம் சார்பதிவாளர் சேர்ந்து, கூட்டு சதி செய்து சென்னை விருகம்பாக்கம் 100 கோடி மதிப்பிலான நிலத்தை திருநெல்வேலி ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஒப்பந்தப் பத்திரப்பதிவு மோசடி ஆவணம் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு ஆணையிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 2022-ல் நடைபெற்ற மோசடி ஒப்பந்த பத்திரப்பதிவு குறித்து அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் ஏப்ரல் 2023-ல் தலைமைச் செயலர், பத்திர பதிவுத்துறை அமைச்சர், பத்திரப்பதிவுத்துறை செயலர்கள் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் என அனைவருக்கும் புகார் அனுப்பியிருந்தது.

அதன் மீது விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி துணை பத்திர பதிவுத்துறை தலைவர் இது மோசடி ஆவணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்பொழுது பத்திரப் பதிவுத்துறையால் இது மோசடி ஆவணம் என்று ஆணையிட்டு இந்த ஒப்பந்த பத்திரப்பதிவை ரத்தும் செய்துள்ளது. அடுத்தபடியாக மோசடி ஆவணம் பதிவு செய்தவர்கள் மீது FIR பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'' என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு மோசடி - நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு ரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.