ETV Bharat / state

அக்னி நட்சத்திரத்தை அணைக்கும் அசானி புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்!

author img

By

Published : May 11, 2022, 3:57 PM IST

அக்னி நட்சத்திரத்தை அணைக்கும் அசானி புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
அக்னி நட்சத்திரத்தை அணைக்கும் அசானி புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்

அக்னி நட்சத்திரத்தை அசானி புயலின் தாக்கம் அணைக்கும் என்பது போல சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி” தீவிரப்புயல் இன்று (மே11) காலை 02:30 மணி அளவில் புயலாக வலுவிழந்து 08:30 மணி அளவில் ஆந்திரபிரதேசத்தின் மசூலிப்பட்டினம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது வடக்கு - வடகிழக்கு திசையில் வடஆந்திரா கடலோரப் பகுதிகளின் வழியாக நகர்ந்து, இன்று (மே11) இரவு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கூடும்.

வட தமிழ்நாடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(மே 11) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மே12) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 13 முதல் 15ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாகவே மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரம் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தேக்கடி (தேனி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருப்பூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பெரியார் (தேனி), திருப்பூர், பொன்னேரி (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) போன்ற இடங்களில் தலா 3 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), கொடநாடு (நீலகிரி), திருவள்ளூர், தரமணி (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), ஊத்துக்குளி (திருப்பூர்), சென்னை விமானநிலையம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), திரூர் (திருவள்ளூர்), YMC நந்தனம் (சென்னை), ACS மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கொரட்டூர் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), கோத்தகிரி (நீலகிரி), கலவாய் (ராணிப்பேட்டை), தக்கலை (கன்னியாகுமரி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஆலந்தூர் (சென்னை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), திருத்தணி (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), கூடலூர் (தேனி), உத்தமபாளையம் (தேனி), தாளவாடி (ஈரோடு), (கோவை), காட்டுப்பாக்கம் (காஞ்சிபுரம்), பொன்னை அணை (வேலூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), தாராபுரம் (திருப்பூர்), பவானிசாகர் (ஈரோடு), வால்பாறை (கோவை), பூந்தமல்லி ( திருவள்ளூர்), எண்ணூர் (திருவள்ளூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), செய்யாறு (திருவண்ணாமலை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திண்டுக்கல், குழித்துறை (கன்னியாகுமரி), காங்கேயம் (திருப்பூர்), குட் வில் பள்ளி, வில்லிவாக்கம் (திருவள்ளூர்) ஆகிய ஊர்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒடிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரைப் பகுதிகளில் நாளை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் மே 13ஆம் தேதி பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அசானி புயல் எதிரொலி: சென்னை கடற்கரைகளில் கடல் சீற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.