ETV Bharat / state

கைதாகிறாரா மீரா மிதுன்..? : பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Mar 23, 2022, 7:25 PM IST

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதாகிறாரா மீரா மிதுன்..? : பிடிவாரண்டிற்கு நீதிமன்றம் உத்தரவு
கைதாகிறாரா மீரா மிதுன்..? : பிடிவாரண்டிற்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்டப் புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவரைக் கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'பத்தே பத்து ஜெயக்குமார் கெத்து..!' : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் சிறப்பு நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.