ETV Bharat / state

’ என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை' - காவலர் கடிதம்!

author img

By

Published : Dec 21, 2021, 11:43 AM IST

armed-policeman-commits-suicide-in-chennai
armed-policeman-commits-suicide-in-chennai

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆயுதப்படை காவலர் சாதிக் பாட்ஷா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா(26). இவர் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். கீழ்பாக்கம் குட்டியப்பன் தெருவில் உள்ள வாடகை வீட்டில் சக காவலர்களுடன் கடந்த 2 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்தார்.

கடந்த வருடம் சாதிக் பாஷாவிற்கு சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியிட மாறுதல் வழங்கியும் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் சாதிக் சாதிக் பாட்ஷாவிற்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைக்கு செல்வதாக சக காவலர்களிடம் சாதிக் பாட்ஷா தெரிவித்துள்ளார்.

நேற்று சக காவலர்கள் பணியை முடித்து வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த காவலர்கள் உடனடியாக பூட்டை உடைத்து கதவை திறந்த போது சாதிக் சாதிக் பாட்ஷாஅறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கைப்பற்றப்பட்ட கடிதங்கள்

பின்னர், அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்துபோன சாதிக் அறையில் இரண்டு கடிதங்கள் சிக்கியது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும், மற்றொரு கடிதத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற மருத்துவ விடுமுறை கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விடுமுறை தராமல் இழுத்தடித்ததால் காவலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என துறை ரீதியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுகளுக்கு பின் பாம் ஸ்பெஷலிஸ்ட் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.