ETV Bharat / state

தனியார் தங்கும் விடுதியில் தாய், மகள் தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?

author img

By

Published : May 15, 2023, 7:14 AM IST

சென்னை, வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரை பார்க்க வந்த மனைவி மற்றும் மகள் தங்கும் விடுதியில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(42). அவரது மனைவி வெங்கட சுமலதா(34). இந்த தம்பதிக்கு மாங்கனியா(12) என்ற மகள் உள்ளார். அரிகிருஷ்ணன் ஓங்கோல் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி அரிகிருஷ்ணனுக்கு மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிகிச்சைக்காக ஆந்திராவில் இருந்து சென்னை வடபழனியில் உள்ள விஜயா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரி கிருஷ்ணனுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹரி கிருஷ்ணனின் சகோதரர் பிரசாத் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை(மே 14) காலை ஆந்திராவிலிருந்து ஹரி கிருஷ்ணனின் மனைவி வெங்கட சுமலதா மற்றும் மகள் மாங்கனியா இருவரும் சென்னை வடபழனியில் உள்ள விஜய மருத்துவமனைக்கு வந்து ஹரி கிருஷ்ணனைப் பார்த்துள்ளனர். அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் வெங்கட சுமலதா மற்றும் மாங்கனியா இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ள்ளனர்.

இதையடுத்து வெங்கடா சுமலதா மற்றும் அவரது மகள் மாங்கனியா இருவரும் மருத்துவமனைக்கு அருகே உள்ள தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளனர்.சிறிது நேரம் கழித்து ஹரிகிருஷ்ணன் சகோதரர் பிரசாத் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் தங்கி இருந்து அறையில் உள்பக்கம் கதவு பூட்டப்பட்டிருந்தது.

வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பிரசாத் தங்கும் விடுதி ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாங்கனியா மற்றும் வெங்கட சுமலதா தற்கொலை செய்துகொண்டு இறந்த நிலையிலிருந்துள்ளனர். பின்னர், விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: எந்த பிரச்சனைக்கும் தற்கொலை முடிவு என்பது ஒரு தீர்வாக அமையாது. நீங்கள் மன உளைச்சலில் இருந்தால் 1098 அல்லது 9152987821 என்ற உதவி எண்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்.

இதையும் படிங்க: ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து - 6 பெண்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.