ETV Bharat / state

துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்... கடத்தல் தங்கத்தை கைமாற்ற முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:24 AM IST

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவிய ஊழியர் கைது!
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவிய ஊழியர் கைது!

Chennai Airport: துபாயில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகள்ளை விமான நிலையத்தை விட்டு வெளியே கடத்த முயன்ற ஒப்பந்த ஊழியரை மடக்கிப் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளை சுங்கச் சோதனை இல்லாமல் வெளியே கடத்திச் செல்ல உதவியதாக, விமான நிலைய ஒப்பந்த ஊழியர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து, அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (அக். 30) வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிடும் போது சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் அருள் பிரபாகர் (வயது 32) என்பவர் அவசர அவசரமாக விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரித்த போது, அருள் பிரபாகர் தனக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பெர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், அவர் பதற்றத்துடன் காணப்பட்டதால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து ஒப்பந்த ஊழியர் அருள் பிரபாகரை, வெளியில் விடாமல் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவரை தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் சுமார் ஒரு 2 கிலோ மதிப்பிலான தங்க கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி, இந்த தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை கடத்தி வந்ததாக அருள் பிராபகர் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர், அருள் பிரபாகர் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வரும் வழியில் நின்று, இலங்கை கடத்தல் ஆசாமி கொண்டு வந்து இருந்த பார்சலை வாங்கி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

தங்கம் கடத்தி வந்த நபர் சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி என்றும் அதனால் அருள் பிரபாகர், அந்த பையணியை அழைத்துச் சென்று, இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டு, வெளியில் வரும்போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த தங்க கட்டிகளை விமான நிலையத்திற்கு வெளியே, திரிசூலம் ரயில் நிலையத்தில் நின்ற ஒருவரிடம் கொடுக்க அருள் பிரபாகர் எடுத்துச் சென்றுள்ளர் என அதிகாரிகள் கூறினர். இதை எடுத்து சுங்க அதிகாரிகள் அருள் பிரபாகரை அழைத்துக் கொண்டு, திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சென்றனர்.

ஆனால் அருள் பிரபாகர், சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார் என்ற தகவல் அந்த நபருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க வந்த நபர் மாயமானதாக சொல்லப்படுகிறது. அதேபோல் துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்த நபர், இலங்கைக்கு விமானத்தில் தப்பி சென்றதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள், அருள் பிரபாகரை கைது செய்து அவரிடம் இருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 2 கிலோ எடை கொண்ட தங்கம் சர்வதேச மதிப்பில் ரூபாய் 1.3 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அருள் பிரபாகரிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: வெளி மாநிலங்களுக்கு போதைக் காளான் பார்சல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட மூவர் கைது.. கொடைக்கானலில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.