சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி(26) என்பவரின் உடமையை சோதனை செய்தபோது, அதில் துணிகளுக்கு இடையே கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர்களைக் கண்டுபிடித்தனர்.
ஒன்பது லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த சுங்கத் துறை அலுவலர்கள், இந்தப் பணம் ஹவாலா பணமா? அது யாருக்காக கடத்தப்பட்டது என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 1,942 கிராம் தங்கம் கடத்தல் - 6 பயணிகளிடம் விசாரணை!