ETV Bharat / state

விமான நிலையத்தில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்!

author img

By

Published : Nov 3, 2019, 11:43 AM IST

பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலர்கள்

சென்னை: விமான நிலையத்தில், மலேசியாவுக்குச் செல்லவிருந்த பயணி ஒருவரிடமிருந்து ஒன்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி(26) என்பவரின் உடமையை சோதனை செய்தபோது, அதில் துணிகளுக்கு இடையே கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர்களைக் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலர்கள்

ஒன்பது லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த சுங்கத் துறை அலுவலர்கள், இந்தப் பணம் ஹவாலா பணமா? அது யாருக்காக கடத்தப்பட்டது என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : 1,942 கிராம் தங்கம் கடத்தல் - 6 பயணிகளிடம் விசாரணை!

Intro:சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ. 9 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
Body:சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ. 9 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி (26) என்பவரின் உடமையை சோதனை செய்தபோது அதில் துணிகளுக்கு இடையே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 9 லட்சத்தி 53 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் யாருக்காக கடத்தப்பட்டது. ஹவாலா பணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.