சென்னை விமானநிலையத்தில் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு: பின்னணி என்ன?

author img

By

Published : Nov 22, 2022, 5:08 PM IST

சென்னை விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவசியம் இனி இல்லை

சென்னை விமான நிலையத்தில் தரைதளப்பணிகளுக்கு மேலும் இரண்டு புதிய தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்படுவதால் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தரை தளப்பணிகளுக்கு மேலும் இரண்டு புதிய தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்படுவதால், சென்னை விமான நிலையத்தில் 4000 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும், இனி சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரை இறங்குவது மற்றும் பயணிகளின் உடைமைகள் வருவது ஆகியவற்றின் காலதாமதங்கள் ஏற்படாது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது, விமான பயணிகளின் உடைமைகளை கையாள்வது போன்ற தரைத்தளப் பணிகளை செய்வதற்காக தற்போது கிரவுண்ட் ஹோல்டிங் ஏஜென்சி ஒன்று மட்டுமே உள்ளது.

ஆனால், கரோனா ஊரடங்குக்கு காலம் ஓய்ந்து தற்போது சகஜ நிலை திரும்பி உள்ளது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால் கிரவுண்ட் ஹோல்டிங் ஏஜென்சி, ஒரு ஏஜென்சியை வைத்து சமாளிப்பது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் புதிதாக மேலும் இரண்டு கிரவுண்ட் ஹோல்டிங் தனியார் ஏஜென்சிகளை, இந்திய விமான நிலைய ஆணையம் நியமித்துள்ளது.

இதன்படி, தற்போது மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில், கிரவுண்ட் ஹோல்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டு வரும், பிரபலமான இரண்டு தனியார் ஏஜென்சிகளை சென்னை விமான நிலையத்தில் கூடுதல் கிரவுண்ட் ஹோல்டிங்கிற்காக ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவசியம் இனி இல்லை!

இந்த புதிய ஏஜென்சிகளிடம் அதி நவீன கருவிகள் மற்றும் திறமையான பணியாளர்கள் இருப்பதாகவும், இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்ற தரைதளப் பணிகள், இனிமேல் துரிதமாக நடக்கும்.

அதேபோல் விமானப் பயணிகளின் உடைமைகளை கையாளுவதும் அதிவேகமாக நடக்கவிருப்பதால், பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படாது. இந்த புதிய 2 ஏஜென்சிகளிலும், சுமார் 4,000 பேர் வரை பணி அமர்த்தப்பட உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் 4,000 பேருக்குக் கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் புதிதாகப் பணிக்கு வரும் இவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் பிசிஏஎஸ் பாஸ்கள், போலீஸ் வெரிஃபிகேஷன், மருத்துவப் பரிசோதனை போன்ற அனைத்தும் முடித்த பின்னர், இவர்கள் அடுத்த 2023ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

அதன்பின்பு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது போன்றவை அதிக தாமதம் இன்றி செயல்படும். அதைப்போல் பயணிகள் தங்களுடைய உடைமைகளை எடுத்துச்செல்வதற்கு நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: எல்லையில் ஊடுருவ முயற்சி ஒருவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.