கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு

author img

By

Published : Aug 31, 2021, 11:52 AM IST

Updated : Aug 31, 2021, 2:15 PM IST

ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது

12:48 August 31

ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்து சாலை மறியலில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும் பெயர் பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) தமிழ்நாடு சட்டப்பேரவையில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல்செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர், மேலும் கலைவாணர் அரங்கம் அமைந்திருக்கக்கூடிய வாலாஜா சாலையின் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11:47 August 31

ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது

காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் சில மணி நேரங்களுக்குப் பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: தொண்டர்களே இந்தத் தலைமை தேவையா? - 'உண்மை விசுவாசிகள்' ஆதங்கம்

Last Updated :Aug 31, 2021, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.