ETV Bharat / state

அக்னி நட்சத்திரம் நாளை முடிவு: வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும்: எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : May 28, 2023, 3:55 PM IST

அக்னி நட்சத்திரம் நாளை முடிவடையும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகாமாகவே இருக்கும் என அறிவிப்பு
அக்னி நட்சத்திரம் நாளை முடிவடையும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகாமாகவே இருக்கும் என அறிவிப்பு

அக்னி நட்சத்திரம் நாளை முடியவுள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என தனியார் வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் (மே 4 ) தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என தனியார் வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கூடிய மழை: மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. “நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 31 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

38 டிகிரி முதல் 40 டிகிரி வரை அதிகரிக்கலாம்: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களை பொறுத்த வரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. "ஜூன் 1 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக இன்று முதல் முதல் நாளை மறுநாள் வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சென்னையில் ஓரிரு இடங்களில் மழை: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியமான சுழல்கள் ஏற்படலாம்" என தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த வரையில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

சூறாவளிக்காற்றுக்கு வாய்ப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்” என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. “28.05.2023 தேதிப்படி குமரிக்கடல் பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

31.05.2023 மற்றும் 01.06.2023: தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் மழைக்காலத்தின் தனியார் வானிலை நிபுணர் ஸ்ரீகாந்த் கூறும் போது, “தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஜூன் முதல் வாரம் வரை வெப்ப நிலை இப்போது உள்ளபடியே தொடரும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: World Hunger Day: மயிலாடுதுறையில் 1000 பேருக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.