ETV Bharat / state

விஜயலட்சுமி வழக்கு: சீமான் ஆஜராகாதது ஏன்?- வழக்கறிஞர் விளக்கம் தான் என்ன!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 3:18 PM IST

seeman advocates explanation on vijayalaksmi case: நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கில் சீமான் ஆஜராகமல் இருப்பதற்கு சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.

seeman advocates explanation on vijayalaksmi case
சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகவில்லை என்பதால் அதற்கு பதில் இன்று (செப் 12) ஆஜர் ஆவார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி அதற்கு உண்டான விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராக வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், சீமான் தரப்பில், வழக்கறிஞர்கள் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகினர். அப்போது சீமான் தரப்பில், இரண்டு கடிதங்கள் காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது.

வளசரவாக்கம் காவல் நிலையம் பகுதியில் போலீசார்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்பொது, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் தலைமையில் 6- வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் நாம் தமிழர் கட்சி சீமான் தரப்பில், வழக்கறிஞர்கள் இன்று ஆஜராகினர். மேலும், சுமார் 30 நிமிடங்கள் காவல் ஆய்வாளரிடம் இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் பேசிய பின்னர் சீமான் ஏன் ஆஜராகவில்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: "சனாதனத்தை ஒழிக்கவே 'இந்தியா' கூட்டணி" - அமைச்சர் பொன்முடி கருத்து; அண்ணாமலை பகிர்ந்த வீடியோ!

இது குறித்து சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, "விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், குற்ற எண் 1007\2011 அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அனுப்பியிருந்தார். சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்படக்கூடிய 160-வது சட்டப்பிரிவின் கீழ் சம்மன் அனுப்பியிருந்தனர்.

சில காரணங்களால், சீமானால் இன்று ஆஜராக முடியவில்லை. அதற்கான காரணங்களை ஆய்வாளரிடம் கூறியுள்ளோம். அதற்குப் பதிலாக, வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜரானோம். சீமான் தரப்பில் வழங்கப்பட்ட இரண்டு கடிதங்களை காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், சீமான் தரப்பில் இருந்து, 2011-ல் முடித்துவைக்கப்பட்ட அந்த வழக்கின் தொடர்ச்சியாகத்தான் இந்த விசாரணை நடக்கிறதா?. அல்லது, தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் புதிதாக வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிரிவுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் இருந்து உத்தரவுகள் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? உள்ளிட்ட விவரங்களை காவல்துறை ஆய்வாளர் அளிக்கும் பட்சத்தில், ஆஜராகும்போது விசாரணைக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்று கடிதத்தில் சீமான் தெரிவித்துள்ளார் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "குடிமராமத்து பணி.. அப்படினா ஈபிஎஸ்க்கு என்னனே தெரியாதே!" - அமைச்சர் துரைமுருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.