ETV Bharat / state

ஓபிஎஸ் மகன் MPஆக வென்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

author img

By

Published : Apr 28, 2023, 9:32 PM IST

Etv Bharat
Etv Bharat

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”ஓட்டுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு தேர்தல் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அதன் பின்னர் இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்து வந்தனர். அனைத்து வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: குட்கா, பான்பராக் தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.