ETV Bharat / state

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பேச்சு - சீமான் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Mar 12, 2023, 11:58 AM IST

case has been filed against Seeman
சீமான் மீது வழக்கு பதிவு

ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின் போது வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பிரசாரம் செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து போலி வீடியோக்களை பரப்புபவர்கள் மீதும், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் போலி பிரசாரம் செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் பீகார் சென்று போலி வீடியோ வெளியிட்ட அமன் என்பவரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பீகாரில் இருந்து தமிழகம் வந்த குழு தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்தது.

மேலும் பல்வேறு மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு அரசு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வட மாநில தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசி பிரசாரம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வந்தது.

இதையும் படிங்க: All the Best: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இந்நிலையில் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், சீமான் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், "வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • All those who used fake videos to incite hate & violence must be dealt with as per the law.

    But this doesn’t absolve those who’re openly calling for violence against #Hindi speaking people in #TN

    Why no action against likes of @SeemanOfficial for their vitriolic utterances? pic.twitter.com/vyu2EkjBQu

    — Prashant Kishor (@PrashantKishor) March 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்காது. தவறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் மீது ஏன் இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, அவரின் விறுவிறுப்பான பேச்சுகளுக்காகவா?" என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் பேசு பொருளாக மாறிய நிலையில் ஈரோடு மாவட்ட போலீசார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினர் இடையே மோதல் உருவக்கும் விதத்தில் பேசியது உள்பட பிரிவுகளில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாள்ர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கு: தப்பிக்க முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.