5 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.. சென்னை காவல் ஆணையர் உத்தரவு

author img

By

Published : Aug 23, 2022, 6:29 AM IST

நகைக் கடையை மிரட்டி லஞ்சம் கேட்ட விவகாரத்தில் 5 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்..!
நகைக் கடையை மிரட்டி லஞ்சம் கேட்ட விவகாரத்தில் 5 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்..! ()

சென்னையில் 5 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: அண்ணாசாலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம் அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரவுடி மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கொலை நடந்ததாக கூறி அண்ணாசதுக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது சண்முக சுந்தரத்திற்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிரபல தங்க நகைக் கடையை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோஹினி தற்போது கஸ்தூரிபாய் மருத்துவமனை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், ஜாம் பஜாரில் கடந்த 16ஆம் தேதி ஆட்டோ ராஜா என்பவரை ரவுடி சூர்யா மற்றும் கூட்டாளிகள் பட்டப்பகலில் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கல்யாண குமார் வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.

வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் வீராசாமி அண்ணாசாலை காவல் ஆய்வாளராகவும், மாம்பலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் போதைப்பொருட்கள் விற்போர் மீது குண்டாஸ் பாயும்... காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.