ETV Bharat / state

'புதிய பாரதம் எழுத்திறவு திட்டத்தில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கல்வி' - அதிகாரி குப்புசாமி தகவல்

author img

By

Published : Mar 12, 2023, 4:16 PM IST

Etv Bharat புதிய பாரதம் எழுத்திறவு திட்டம்
Etv Bharat புதிய பாரதம் எழுத்திறவு திட்டம்

தமிழ்நாட்டில் வயது வந்தோர் கல்வித்திட்டத்தின் கீழ் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டத்தில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் நடப்பாண்டில் படித்து வருகின்றனர் எனவும் இவர்களுக்கு 28 ஆயிரம் தன்னார்வலர்கள் கற்பித்து வருவதாகவும் பள்ளிசார மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குநர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

புதிய பாரதம் எழுத்திறவு திட்டம்

சென்னை: இந்தியாவில் கல்வி கற்காமல் உள்ளவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவைக் கற்பிப்பதற்காக ’வயது வந்தாேர் கல்வித் திட்டம்' தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் மாலை நேரங்களில் வீடுகளின் திண்ணைகளில் வயதானவர்கள் அமர வைக்கப்பட்டு, படித்தவர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. சில ஊர்களில் மின்சார தெரு விளக்கிலும் அமர வைத்துப் படிக்க வைத்தனர்.

அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு இல்லாமல் இருக்கின்றனர். இதற்காக ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட வயது வந்தோர் கல்வித்திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தன்னார்வலர்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் குப்புசாமி கூறும்போது, “பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 15 வயதிற்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் ஆகியவை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவு கற்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க: "என்எல்சி விவகாரத்தில் தெளிவான முடிவு தேவை" - கி.வீரமணி!

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி தொடங்கி வைத்தார். அப்போது 4.50 லட்சம் பேர் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 5 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு, 28 ஆயிரத்து 848 தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இவர்களின் வாழ்வாதாரத்திற்கான வேலை பாதிக்காத வகையில் தினமும் 2 மணி நேரம் நூறு நாள் வேலை நடைபெறும் இடம், நூலகம், பள்ளிகள், குறிப்பிட்ட பகுதிகள், திண்ணைகளிலும் தன்னார்வலர்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வேத பெண்கள் தினத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஜூன் மாதம் திட்டம் தொடங்கப்பட்டு 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை இணைத்து கல்வி கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வீடியோகளும் இந்த திட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: All the Best: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.