ETV Bharat / state

பேட்டரி வாகனங்களால் ஆண்டுக்கு 3,000 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு தவிர்ப்பு - சென்னை மாநகராட்சி!

author img

By

Published : Dec 26, 2022, 7:15 PM IST

metric
metric

சென்னை மாநகராட்சியில் குப்பைகள் சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வரும் 5,863 பேட்டரி வாகனங்களால் ஆண்டுக்கு 3,000 மெட்ரிக் டன் அளவிற்கு கார்பன் வெளியேற்றம் தவிர்க்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னையில் தூய்மைப் பணிகளுக்காக, மாநகராட்சி சார்பில் 2,107 பேட்டரி வாகனங்கள், உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் சார்பில் 2,919 பேட்டரி வாகனங்கள், சென்னை என்விரோ நிறுவனத்தின் சார்பில் 837 பேட்டரி வாகனங்கள் என மொத்தம் 5,863 பேட்டரி வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த வாகனங்களுக்காக 77 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கியின் வாயிலாக சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, குப்பைகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த 5,863 வாகனங்கள் திரவ எரிபொருள் அல்லாமல் பேட்டரியால் இயங்கும் வாகனங்களாக செயலாக்கத்திற்கு வந்துள்ளதால், ஆண்டுக்கு 3,000 மெட்ரிக் டன் அளவிற்கு கார்பன் வெளியேற்றம் தவிர்க்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குப்பைகள் சேகரிப்புக்காக தற்போது பயன்பாட்டில் உள்ள 616 மூன்று சக்கர மிதிவண்டிகளுக்குப் பதிலாக, 350 பேட்டரி வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.