ETV Bharat / state

பெண் மருத்துவர் தற்கொலை

author img

By

Published : Jan 12, 2021, 4:58 PM IST

SRM  hospital female doctor committed suicide by stabbing herself in the hostel room
SRM hospital female doctor committed suicide by stabbing herself in the hostel room

செங்கல்பட்டு: எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் பெண் மருத்தவர் ஒருவர், விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில், எஸ்.ஆர்.எம். மருத்துவமனை உள்ளது. இங்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து(27) என்ற பெண் பல் மருத்தவராக பணியாற்றி வந்தார். இவர் பொத்தேரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை இவர் தங்கியிருந்த விடுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர், உயிரிழந்த மருத்துவர் இந்துவின் சடலத்தைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

SRM  hospital female doctor committed suicide by stabbing herself in the hostel room
தற்கொலை எண்ணம் மேலோங்கும் போது....

இச்சம்பவம் குறித்த விசாரணையில், உயிரிழந்த மருத்துவர் இந்துவின் தந்தை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. தந்தை இறந்த துக்கத்தாலும், மனஉளைச்சலாலும், இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.