ETV Bharat / state

எரிந்த நிலையில் கிடந்த சடலம் - தொடர் கொலைகளால் பொதுமக்கள் அச்சம்

author img

By

Published : Aug 4, 2021, 5:11 AM IST

எரிந்த நிலையில் கிடந்த சடலம்
எரிந்த நிலையில் கிடந்த சடலம்

செங்கல்பட்டு அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் அருகே எரிந்த நிலையில் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் ஆத்தூர் அருகே எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலமொன்று கிடப்பதாக அச்சிறுப்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து எரிந்த நிலையில் கிடந்த சடலம் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னதாக, ஒரத்தி அருகே இதேபோன்று எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக, மேல்மருவத்தூர் அருகே எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

தற்போது, ஆத்தூர் பகுதியிலும் அடையாளம் தெரியாத சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக நான்கு மாத இடைவெளியில், இப்படி சடலங்கள் கண்டெடுக்கப்பட்டும், கொலையாளிகள் யார், இறந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இதையும் படிங்க: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் - கொலைக்கான காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.