ETV Bharat / state

செங்கல்பட்டு விபத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

author img

By

Published : Jul 8, 2022, 4:14 PM IST

செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்.

செங்கல்பட்டு விபத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
செங்கல்பட்டு விபத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை: சென்னையில் இருந்து கடலூருக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து இன்று (ஜுலை 8) காலை சென்றது. பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே, காலை 9 மணியளவில் செல்லும்போது, முன்னால் சென்ற லாரி மீது படு பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பதினைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் வேண்டி டுவிட்டரில் டிவிட் செய்திருந்தார்.

  • செங்கல்பட்டு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வருந்துகிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: பிரதமர் @narendramodi

    — PMO India (@PMOIndia) July 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து - 6 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.