ETV Bharat / state

காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு!

author img

By

Published : Mar 12, 2021, 9:59 AM IST

செங்கல்பட்டு செய்திகள்
காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு

செங்கல்பட்டு: கல்லப்பட்டு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி கடந்த 8 ஆம் தேதி காணாமல் போன நிலையில் நேற்று (மார்ச்11) அதேபகுதியிலுள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் பி.வி களத்தூர் அருகேயுள்ள கல்லப்பட்டு என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோகிணி (17). இவர் பி.வி களத்தூரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ரோகிணி, வீடு திரும்பவில்லை. எனவே சந்தேகமடைந்த பெற்றோர், உறவினர்கள் திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில், ரோகிணியை காணவில்லை எனப் புகார் அளித்துள்ளனர். பின் மூன்று நாள்கள் கழித்து நேற்று (மார்ச்11) அதே பகுதியிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். இதைத்தொடர்ந்து ரோகிணியின் உடலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, இது கொலையா, தற்கொலையா என்று பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீ குளித்து தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.