ETV Bharat / state

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு வலை!

author img

By

Published : Apr 24, 2021, 11:16 PM IST

AIADMK party member stabbed to death

செங்கல்பட்டு: மறைமலைநகர் முருகன் கோயிலில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமாறன். அதிமுக பிரமுகரான இவர் மேன்பவர் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். தொழிலதிபரான இவர் தனது திருமண நாளான இன்று (ஏப்.24) மறைமலைநகர் ஶ்ரீ செல்வமுத்து குமரசுவாமி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட தனது மனைவி, மகன், மகளுடன் சென்றார். இவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் கூடவே இருக்க அனுமதியுண்டு .
’இருந்தபோதிலும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் இருக்கும்போதே நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் திருமாறன் மீது குண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்ததுவிட்டு தப்பியோடினர்.

தப்பிச் சென்ற கும்பலை திருமாறனின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் காவல் துறையினர், உயிரிழந்த திருமாறனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவானைக்கு அனுப்பிவைக்க முயன்றபோது, அவரது உறவினர்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

மேலும், அவரது பாதுகாவலரால் சுடப்பட்டத்தில் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் ஆபத்தான சூழ்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், மருத்துவமனையிலுள்ள நபரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.