ETV Bharat / state

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்; அமைச்சர் வெளியீடு

author img

By

Published : Jul 3, 2019, 11:51 PM IST

சென்னை: இந்தாண்டு கால்நடைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அதிகளவில் கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவப் படிப்புகான தரவரிசைப் பட்டியல்; அமைச்சர் வெளியீடு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள இடங்களுக்கு 2019 - 20ஆம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலைச் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கு 18 ஆயிரத்து 738 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான 17 ஆயிரத்து 122 மாணவர்களுக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான தரவரிசை பட்டியலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கால்நடை மருத்துவ பட்டப் படிப்பில் தருமபுரியைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவி முதலிடத்தையும், தூத்துக்குடி மாணவி ஜேன் சில்வியா இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாணவி வர்ஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சிவகங்கை மாணவி லட்சுமி பிரியதர்ஷினி முதலிடத்தையும், திருச்சி மாணவி ஐஸ்வர்யா இரண்டாமிடத்தையும், தர்மபுரி மாணவர் சுரேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் தமிழ்நாடு கால்நடைத் துறை மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வறட்சி காலமாக உள்ளதால் கிராமப்புறங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் அளிப்பதற்காக 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தொட்டிகளை உள்ளாட்சித் துறையுடன் இணைந்து கட்டி தந்துள்ளோம்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,800 ஏக்கர் பரப்பளவில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு அனைத்து வகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன் கால்நடைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநில அரசால் வழங்கப்படும் விலையில்லா ஆடு, கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தால் கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அவற்றிற்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகளவில் கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் தொடங்க வேண்டும் என முதலமைச்சரிடம் பேசியுள்ளோம், என்றார்.

Intro:கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையம் அதிக அளவில் அறிவிக்கப்படும்Body:சென்னை, தமிழகத்தில் இந்த ஆண்டு கால்நடைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அதிக அளவில் கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தில் உள்ள இடங்களுக்கு 2019 20 ஆம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, வீட்டைக் உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு பால்வள தொழில்நுட்ப படிப்பு ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து மே மாதம் ஐந்தாம் தேதி முதல் ஜூன் மாதம் 17ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும் அவர்களின் சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமாக சரிபார்க்கப்பட்டது
கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கு 18 ஆயிரத்து 738 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான 17 ஆயிரத்து 122 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுக்கான தரவரிசை பட்டியலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி இடம் மற்றும் பிற விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை ஏற்கனவே அவர்கள் பதிவு செய்திருந்த இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
கால்நடை மருத்துவ பட்டப் படிப்பில் தர்மபுரியை சேர்ந்த சுவாதி என்ற மாணவி முதலிடத்தையும், தூத்துக்குடி மாணவி ஜேன் சில்வியா இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாணவி வர்ஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சிவகங்கை மாணவி லட்சுமி பிரியதர்ஷினி முதலிடத்தையும், திருச்சி மாணவி ஐஸ்வர்யா இரண்டாமிடத்தையும், தர்மபுரி மாணவர் சுரேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இளங்கலை கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக அளவில் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதற்கு ஏற்ப கூடுதல் இடங்களை துவக்குவது குறித்து தமிழக முதலமைச்சர் உடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் தமிழ்நாடு கால்நடை துறை மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வறட்சி காலமாக உள்ளதால் கிராமப்புறங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் அழிப்பதற்காக 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தொட்டிகளை உள்ளாட்சி துறையுடன் இணைந்து கட்டி தந்துள்ளோம்.
அதேபோல் வாஷிங்டனில் உள்ள ஒக்லஹோகாமா பல்கலைக்கழகத்துடன் செய்யப்பட்டுள்ளது ஒப்பந்தத்தின் மூலம் அங்கிருந்து மாணவர்கள் தமிழகத்திலும் தமிழக மாணவர்கள் அங்கு சென்றோம் கல்வி பயின்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,800 ஏக்கர் பரப்பளவில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு அனைத்து வகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன் கால்நடைகளின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா ஆடு கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தால் கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .எனவே அவற்றிற்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிக அளவில் கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை துவக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் பேசியள்ளோம். எனவே கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.