புத்தாண்டு முதல் வாட்டர் கேன்களின் விலை உயரவுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸைச் சேர்ந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், அடைக்கப்பட்ட குடிநீர் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வால், 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர், 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பாக்ஸ்களின் மீது புத்தாண்டு முதல் ரூ. 10 விலை உயர்த்தப்படும் என்றும், 20 லிட்டர் கேன் ஃபில்லிங் மீது ரூ. 2-ம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெட்டி ஒன்றுக்குத்தான் ரூ. 10 வரை உயர்த்தப்படும் என்று உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
பெரு நகரங்களில் கேன் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையில் ஒன்று. வாட்டர் கேன் தொழிலில் இன்றைக்கு ஏராளமானோர் இறங்கியுள்ளனர்.
பொதுமக்களுக்கு சுகாதாரமான இலவச குடிநீர் வழங்கும் பொறுப்புள்ள அரசு, குறைந்த விலையிலாவது அதனை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: HEAVY TRAFFIC IN KODAIKANAL: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்