ETV Bharat / state

அரியலூர் மின்மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

author img

By

Published : Feb 1, 2020, 10:59 AM IST

அரியலூர் மின்மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
அரியலூர் மின்மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

அரியலூர் : மின்மயானத்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கைவைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு நகராட்சிகள் அமைந்துள்ளன. அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.

பல்வேறு சமூகத்தினருக்கு பல இடங்களில் சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ளது. சுடுகாட்டில் சடலங்களை எரிக்கும்போது ஏற்படும் காற்று மாசு, சுற்றுப்புற சூழல் பாதிப்பால் ஏற்படும் பாதிப்பை நீக்குவதற்காக அரியலூர் நகராட்சி 2017- 18ஆம் ஆண்டு சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் மின்மயானம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் தற்போதுவரை பணி முழுமைபெறாமல் உள்ளது.

அரியலூர் மின்மயானத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர கோரிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் மயானத்தை பயன்பாட்டில் கொண்டுவந்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க :கரூரில் பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு - போலீஸ் விசாரணை

Intro:அரியலூர் மின்மயானத் தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை


Body:அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஜெயங்கொண்டம் என 2 நகராட்சிகள் அமைந்துள்ளது அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் பூச்சி மூன்று தெருக்கள் அமைந்துள்ளன சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களின் உள்ள பல்வேறு சாதியினருக்கும் பல இடங்களில் சுடுகாடு மற்றும் இடுகாடு அமைந்துள்ளது சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் போது ஏற்படும் காற்று மாசு மற்றும் சுற்றுப்புற சூழல் பாதிப்பால் ஏற்படும் பாதிப்பை நீக்குவதற்காக அரியலூர் நகராட்சி 2017 18 ஆம் ஆண்டு சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் கட்டும் பணி தொடங்கியது ஆனால் தற்போது வரை பணி முழுமை பெறாமல் உள்ளது


Conclusion:எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் மயானத்தை பயன்பாட்டில் கொண்டுவந்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.