TOKYO PARALYMPICS: வில்வித்தையில் வெண்கலம் வென்றார் ஹர்விந்தர் சிங்!

author img

By

Published : Sep 3, 2021, 6:25 PM IST

ஹர்விந்தர் சிங்

பாரா ஒலிம்பிக் வில்வித்தை ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்று, வில்வித்தையில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆடவர் வில்வித்தை ஒற்றையர் ரிகர்வ் பிரிவில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி இன்று (செப். 3) நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், கொரிய வீரர் கிம் மின் சூ உடன் மோதினார்.

இப்போட்டியில், ஹர்விந்தர் சிங் 6-5 என்ற செட் கணக்கில் கொரிய வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதன்மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று 37ஆவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: 19 வயதில்2 பதக்கம்; டோக்கியோவில் கலக்கிய அவனி லெகாரா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.