மியாமி: அமெரிக்காவின் மியாமியில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் கோப்பைப் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரரான அலிரேஸா ஃபிரோஜாவை தமிழ்நாடு செஸ் வீரர் பிரக்ஞானந்தா இன்று (ஆக 16) எதிர்கொண்டார். மொத்தம் 4 ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் 2.5-1.5 என்ற கணக்கில் ஃபிரோஜாவை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் மொத்தமாக 8 உலக சாம்பியன்கள் பங்கேற்றுள்ளனர். புள்ளிப்பட்டியலில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் 3 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல பிரக்ஞானந்தாவும் மூன்று புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது, 21ஆம் தேதி முடிகிறது. இந்த போட்டிகளில் வெற்றிபெரும் ஒவ்வொரு சுற்றுக்கும் 6 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும்.
இதையும் படிங்க: ஜிம்பாப்வே தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்