ETV Bharat / sports

உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா

author img

By

Published : Oct 28, 2019, 11:26 PM IST

joshna

கெய்ரோ: உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா முன்னேறியுள்ளார்.

பி.எஸ்.ஏ. உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் எகிப்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா சார்பில் களமிறங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, இரண்டாவது சுற்றில் ஹாங்காங் வீராங்கனை ஹோ ட்சே-லேக் உடன் மோதினார்.

இப்போட்டியில் ஹாங்காங் வீராங்கனை காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். அப்போது ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-4 என முன்னிலை வகித்ததால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு ஜோஷ்னா தகுதிபெற்றார்.

உலகின் 12ஆவது நிலை வீராங்கனையான ஜோஷ்னா அடுத்த போட்டியில் இரண்டாவது நிலை வீராங்கனையான எகிப்தைச் சேர்ந்த நூர் எல் செர்பினியை எதிர்கொள்கிறார்.

Intro:Body:

josna chinappa 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.