ETV Bharat / sports

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர்: பட்டம் வென்ற இந்திய வீரர்கள்!

author img

By

Published : May 5, 2019, 10:09 PM IST

ஸ்குவாஷ்

கோலாலம்பூர்: ஆசிய ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

2019ஆம் ஆண்டுக்கான ஆசிய ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதன் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர் லியோவை எதிர்த்து இந்தியாவின் சவுரவ் கோஷல் விளையாடினார்.

இதில் 11-9, 11-2, 11-8 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று இந்திய வீரர் சவுரவ் கோஷல் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்திய வீரர் சவுரவ் கோஷல்
இந்திய வீரர் சவுரவ் கோஷல்

அதேபோல் மகளிர் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஹாங்காங்கின் ஆனி அவ்-ஐ எதிர்த்து இரண்டாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மோதினார். தொடக்கத்திலிருந்தே அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனை ஜோஷ்னா, 11-2 என முதல் செட்டை கைப்பற்ற, பின்னர் சுதாரித்துக்கொண்ட ஆனி இரண்டாவது செட்டை 6-11 எனக் கைப்பற்றினார். இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஜோஸ்னா சின்னப்பா
ஜோஸ்னா சின்னப்பா

பின்னர் மூன்றாவது செட்டை 11-8 என ஜோஷ்னா கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற நான்காவது செட்டில் 11-6 என கைப்பற்றிய ஜோஷ்னா ஆசிய தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.