ETV Bharat / sports

ஐஎஸ்எல்: சென்னை எஃப்சி - கிழக்கு வங்கம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சமன்

author img

By

Published : Dec 27, 2020, 1:50 AM IST

isl-chennaiyin
isl-chennaiyin

கோவா: சென்னை எஃப்சி, கிழக்கு வங்கம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து தொடர், 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

சென்னை எஃப்சி, கிழக்கு வங்கம் அணிகளுக்கு இடையேயான ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து தொடர், கோவாவின் வாஸ்கோவில் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது.

இதில், சென்னை அணியின் லல்லின்சாவுலா 13ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, அதைத் தொடர்ந்து 64ஆவது நிமிடத்தில் ரஹீம் கோல் அடித்தார். இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் சென்னை அணி முன்னிலை பெற்றது.

இதையடுத்து, கிழக்கு வங்கம் அணியின் மாட்டி ஸ்டெய்ன்மான் 59, 68ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன் பிறகு, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனால், சென்னை எஃப்சி, கிழக்கு வங்கம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சமனில் முடிவடைந்தது. ஐஎஸ்எல் 2020 தொடரில், 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 3 சமன் என 9 புள்ளிகளுடன் சென்னை அணி 7ஆவது இடத்துக்கு முன்னேறியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.