ETV Bharat / sports

ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா

author img

By

Published : Oct 19, 2021, 2:51 PM IST

டி20 உலகக்கோப்பை போட்டி முடிந்ததும் தோனி சென்னை வருவார் என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறும் என சிஎஸ்கே அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா
முதலமைச்சர் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2021 தொடரை வென்று, நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.ஐபிஎல் கோப்பை சென்னை வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகக் குழு சார்பில் கோப்பையை தி. நகரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வைத்து பூஜை செய்தனர்.

இதன்பின்னர், சென்னை அணியின் உரிமையாளரும், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை வரும் தோனி

அப்போது ," சென்னை அணியின் வெற்றியைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தற்போது நடைபெறும் உலகக்கோப்பை போட்டி முடிந்ததும் தோனி சென்னை வருவார்.

தோனியின் கையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோப்பை வழங்கப்படும். முதலமைச்சர் தலைமையில் சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சிறப்பான அணி, தோனி மெண்டராக உள்ளதால் நிச்சயம் இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லும்” என்றார்.

இதையும் படிங்க: தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை - சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.