ETV Bharat / sports

Mohammed Rizwan : ஐதராபாத்தா இது.. நா ராவல்பிண்டின்ல நினைச்சேன்! - பாக். வீரர் முகமது ரிஸ்வான்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 4:03 PM IST

Mohammed Rizwan
Mohammed Rizwan

Mohammed Rizwan says Playing in Hyderabad feels like Rawalpindi :ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் விளையாடியது பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடியது போன்று நினைவுபடுத்தியதாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தெரிவித்து உள்ளார்.

ஐதராபாத் : தெலங்கான மாநிலம் ஐதராபாத் மைதானத்தில் விளையாடியது பாகிஸ்தான் ராவல்பிண்டியில் விளையாடியது போன்ற உணர்வை தந்ததாக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தெரிவித்து உள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நேற்று (அக். 10) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 122 ரன்களும், சமரவிக்ரமா 108 ரன்களும் விளாசித் தள்ளினர். தொடர்ந்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் மற்றும் விக்கெட் கீப்பர் முகமாது ரிஸ்வான் அதிரடி விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இருவர் கூட்டணி இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தது. முடிவில் 48 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 4 சதங்கள் பதிவானது இதுவே முதல்முறை.

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட்டாகாமல் 131 ரன்கள் குவித்தார். ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் கம்ரால் அக்மல் 124 ரன்கள் குவித்ததே உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

அந்த சாதனையை விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் முறியடித்தார். 131 ரன்கள் விளாசி பாகிஸ்தான் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஐதராபாத் மைதானத்தில் விளையாடியது ராவல்பிண்டியை நினைவுபடுத்தியதாக தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "ஐதராபாத்தில் இருந்தது போன்றே உணரவில்லை. ராவல்பிண்டியில் நடந்த ஆட்டத்தில் விளையாடியது போல் உணர்ந்தேன் என்று தெரிவித்தார். மேலும், ஐதராபாத் மைதானத்திற்கு முதல் முறையாக வந்த போது தனது பொறுப்பாளர் இந்த மைதானத்தில் சதம் விளாசுவேன் என்று தெரிவித்ததாகவும் அதன்படியே இலங்கை அணிக்கு எதிரான அட்டத்தில் சதம் அடித்ததாகவும் தெரிவித்தார்.

மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கு கொடுத்த வரவேற்பை பார்த்த போது, ராவல்பிண்டியில் விளையாடியது போன்று தோன்றியதாக முகமது ரிஸ்வான் தெரிவித்தார். இலங்கை ரசிகர்கள் என அனைவருடனும் மறக்க முடியாத நினைவுகள் உருவானதாகவும் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியான சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

விமான நிலையம் முதல் வீரர்களை கவனித்துக் கொண்டது வரை ராவல்பிண்டியில் விளையாடியதை போன்று மீண்டும் மீண்டும் நினைவு படுத்தியதாக முகமது ரிஸ்வான் தெரிவித்தார். லாகூரில் உள்ள மைதானம் பெரியது என்றும் நிறைய பேர் அங்கு வருது ஆட்டங்களை பார்த்து செல்ல முடியும், ஆனால் பாகிஸ்தானின் போட்டி ராவல்பிண்டியில் நடப்பது போல் தெரிந்ததாக கூறினார். முகமது ரிஸ்வான் - அப்துல்லா ஷபீக் இணை 3வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக குவித்தனர்.

இதையும் படிங்க : Babar Azam : ஐதராபாத் மைதான ஊழியர்களுக்கு பாகிஸ்தான் ஜெர்சி! பாபர் அசாம் பரிசளிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.