ETV Bharat / sports

2018இல் அன்று ஜாதவ் செய்த மேஜிக்... மீண்டும் பால்தான்ஸை வீழ்த்துமா சிஎஸ்கே?

author img

By

Published : Oct 23, 2020, 4:14 PM IST

ipl-2020-struggling-csk-to-face-arch-rivals-mi-in-do-or-die-battle
ipl-2020-struggling-csk-to-face-arch-rivals-mi-in-do-or-die-battle

ஷார்ஜா : மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போன்ற ரைவல்ரி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு சற்றும் சளைத்தது அல்ல சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி!

ஒவ்வொரு ஆண்டும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையே ஒரு போரே நடைபெறும். சிஎஸ்கேவிடம் தோற்றுவிடக் கூடாது என மும்பை ரசிகர்களும், பால்தான்ஸிடம் தோற்றுவிடக் கூடாது என சிஎஸ்கே ரசிகர்களும் வேண்டிக் கொண்டே இருப்பார்கள்.

ரோஹித்
ரோஹித்

ஆனால் இந்த ரைவல்ரி போட்டிகளில் அதிகப்படியாக வென்றது மும்பை அணி தான். கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிராக சென்னை ஆடிய நான்கு போட்டிகளிலும் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. அதிலும் இறுதிப்போட்டியில் வாங்கிய அடியை ரசிகர்கள் வாழ்வில் எப்போதும் மறக்கமாட்டார்கள். ஆனால் இதற்கு இந்த ஆண்டு நடைபெற்ற தொடக்கப் போட்டியில் மும்பை அணிக்கு சென்னை பதில் அளித்தது.

தோனி
தோனி

இந்த ஆண்டைப் போல் தான் கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கப் போட்டியும் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. சிஎஸ்கே அணியின் ’கம்பேக்’ போட்டி என்பதால் அந்த அணியின் ரசிகர்கள் தாரை தப்பட்டையுடன் கொண்டாட அப்போது தயாராக இருந்தார்கள். ஆனால் கொண்டாட்டம் நடக்க வேண்டும் என்றால் வெற்றி முக்கியமல்லவா? அந்த வெற்றி கடைசி நொடி வரை போராடி கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்றதொரு மகத்தான வெற்றியைதான் சென்னை அணி அன்று ஈட்டியது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, வழக்கம்போல் பவுலிங் எனத் தெரிவித்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், குர்ணால் பாண்டியா ஆகியோரின் பேட்டிங்கால் 20 ஓவர்களுக்கு 165 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி
மும்பை அணி

மும்பை மைதானத்தில் நடந்த போட்டி என்பதாலும், பும்ரா, முஷ்தாஃபிகுர் ரஹ்மான், மெக்லனகன் ஆகியோர் மீதுள்ள நம்பிக்கையாலும் மும்பை ரசிகர்கள் பந்துவீச்சின்போது பெரும் ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர். ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் சென்னை அணியின் பேட்டிங்கும் கொஞ்சம் ஆட்டம் கண்டது.

தொடக்கம் கொடுத்த ஷேன் வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி, ஜடேஜா என அனைத்து முக்கிய வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். களத்தில் ஜாதவும், பிராவோவும் ரன்கள் சேர்த்து வந்தபோது, ஜாதவுக்கு திடீரென ஹாம்ஸ்ட்ரிங் ஏற்பட்டதால் அவரும் பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் முன்னாள் மும்பை வீரர் ஹர்பஜன், மார்க் வுட் ஆகியோரை எதிரில் நிற்கவைத்து பிராவோ ஆடிய ஆட்டம் வேறு லெவல் இன்னிங்ஸ். 30 பந்துகள் பிடித்து, 7 சிக்சர், 3 பவுண்டரி அடித்து 68 ரன்களுக்கு பிராவோ ஆட்டமிழந்தார்.

சென்னை அணிக்கு 8 விக்கெட்டுகள் காலி. யார் வென்று கொடுப்பார்கள் என ஏங்கிய சிஎஸ்கே ரசிகர்களுக்கு, ஹாம்ஸ்ட்ரிங்கால் பெவிலியன் சென்ற ஜாதவ் களமிறங்கினார். 6 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க வேண்டும். முஷ்டாஃபுகுர் வீசிய கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளில் ரன்கள் சேர்க்கப்படவில்லை.

சிஎஸ்கே கேம்ப்பில் ப்ரஷர் எகிறியது. ஆனால் டென்ஷன் ஆகாமல் நான்காவது பந்தை ஸ்கூப் செய்து சிக்சர் அடித்தார் ஜாதவ். எதிரில் நின்ற தாஹிர், பேட்டை கீழே போட்டிவிட்டு ஜாதவிடம் சென்று அவரைக் கட்டிப்பிடித்து பாராட்டினார். பின்னர் வீசிய ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுப்பார் என யோசித்த நிலையில், பவுண்டரியுடன் வெற்றியைப் பதிவு செய்தார்.

ஜாதவ்
ஜாதவ்

இன்று சமூகவலைதளங்களில் ரசிகர்களால் கலாய்க்கப்படும் ஜாதவ் தான் அன்று சிஎஸ்கே அணியின் ஹீரோ. அந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் தான் சென்னை அணிக்காக அவர் ஆடினார். ஆனால் இன்று வரை ரைவல்ரி அணியான மும்பைக்கு எதிராக மிகச்சிறந்த வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.

வழக்கமாக கடைசி வரை நகம் கடிக்க வைத்து, ரசிகர்களுக்கு பிபி ஏற்றும் சிஎஸ்கேவுக்கு இந்த சீசன் சரியாக அமையவில்லை. ’we gave up’ என கடந்த போட்டியில் நம்பிக்கையின்றி பேசிய சென்னை அணி கேப்டன் தோனிக்கு, அன்று நடந்தது போல் இன்றும் சிறப்பான இன்னிங்ஸ் அமையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: தோனி ஜெர்சியுடன் ஜோஸ் பட்லர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.