சையத் முஷ்டாக் அலி டி20 தொடரை கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் சூப்பர் லீக் சுற்றில், மகாராஷ்டிரா அணியை சேர்ந்த ராகுல் திருபாதி அனைவரும் அசர வைக்கும் வகையில் ஃபீல்டிங் செய்து மிரட்டி உள்ளார்.
ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 177 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, 178 ரன் இலக்குடன் ஆடிய ரயில்வேஸ் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 22 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றிபெற முடியாது என்று தெரிந்தும், கடைசி பந்தை அந்த அணியின் பேட்ஸ்மேன் மன்ஜித் சிங் சிக்சர் அடிக்க முயற்சித்தார்.
அவர் நல்ல உயரத்தில் அடித்த பந்தை லாங் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்திருந்த ராகுல் திருபாதி, பவுண்டரி லைனில் எகிறி குதித்து தனது வலது கையில் பந்தை பிடித்த படியே சக வீரரிடம் தூக்கி எறிந்தார். அதை மகாராஷ்டிரா அணியின் மற்றொரு வீரர் ஹிம்கனேகர் பிடித்தார். இதனால், மகாராஷ்டிரா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றது.
- — Mushfiqur Fan (@NaaginDance) March 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Mushfiqur Fan (@NaaginDance) March 12, 2019
">— Mushfiqur Fan (@NaaginDance) March 12, 2019
ராகுல் திருபாதியின் அசத்தலான ஃபீல்டிங் வீடியோ இணையளத்தில் வைரலாகி வருகிறது.