Maanaadu Release: தடைகள் தகர்ந்தன; திட்டமிட்டபடி திரைக்கு வரும் 'மாநாடு'

author img

By

Published : Nov 24, 2021, 10:51 PM IST

Updated : Nov 25, 2021, 6:34 AM IST

Maanadu Release

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தில், சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார்.

இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, திரை வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இதற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

தடைகள் தகர்ந்தது

இத்திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சில தவிர்க்க இயலாத காரணங்களால் பட வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாகவும், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று மாலை ட்விட்டரில் அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரும்ப வரும் எஸ்டிஆர்

இந்நிலையில், மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை (நவ. 25) வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"அனைவரின் அன்புக்கும், உதவிக்கும் நன்றி. நாளை முதல் மாநாடு வெளியாகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு ட்வீட்
வெங்கட் பிரபு ட்வீட்

இதனால், பட வெளியீட்டில் இருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டதால் 'மாநாடு' திரைப்படம் நாளை திட்டமிட்டபடி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட 'மாநாடு' - வலியோடு தெரிவித்த சுரேஷ் காமாட்சி

Last Updated :Nov 25, 2021, 6:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.