ETV Bharat / sitara

ஷங்கர்- ராம் சரண் கூட்டணி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குகிறது

author img

By

Published : Sep 8, 2021, 10:11 AM IST

ஷங்கர் - ராம் சரண்
ஷங்கர் - ராம் சரண்

நடிகர் ராம் சரணின் 15ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று (செப் 8) ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியாகிறது.

தற்காலிகமாக 'RC15' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைத் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 50ஆவது படமாகும்.

இந்நிலையில் ராம் சரணின் 15ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று (செப் 8) முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாகப் பாடலை படமாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கியாரா அத்வானி நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தில் ஜெயராம், அஞ்சலி, சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

இயக்குநர் ஷங்கர் கடைசியாக கடந்த 2001ஆம் ஆண்டு 'முதல்வன்' படத்தை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதனையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் அல்லாத வேற்று மொழி ஹீரோவை வைத்து ஷங்கர் படம் இயக்குகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.