ETV Bharat / sitara

பொன்னியின் செல்வன் ரிலீஸ் வதந்தி - படக்குழு அறிவிப்பு

author img

By

Published : Feb 9, 2022, 10:53 PM IST

பொன்னியின் செல்வன் ரிலீஸ் வதந்தி
பொன்னியின் செல்வன் ரிலீஸ் வதந்தி

முன்னணி ஓடிடி நிறுவனம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக வதந்தி பரவியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டப் பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகம் வெளியீட்டுக்குப் பிறகு, இரண்டாம் பாகத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதனிடையே, சில சமூக வலைதளத்தில் முன்னணி ஓடிடி நிறுவனம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி வந்தது.

உடனே இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் “திரையரங்க வெளியீட்டுக்காகவே ‘பொன்னியின் செல்வன்’ தயாராகி வருகிறது. ஓடிடியில் நேரடி வெளியீடு குறித்த தகவல்கள் அனைத்துமே வதந்தி தான். பெரும் பொருட்செலவில் உருவாக்கி உள்ளோம்.

இந்தப் பிரமாண்டத்தைத் திரையரங்கில் மக்கள் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்றே நினைக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

'பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கவுள்ளது. இந்தாண்டு ஜூலை மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய இளைஞரை சுமந்து சென்று காப்பாற்றிய சோனு சூட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.