ETV Bharat / sitara

'கே. பாலசந்தர் சாதனைகளை அரசு ஆவணப்படுத்த வேண்டும்..!' - வைரமுத்து

author img

By

Published : Jul 10, 2019, 4:58 PM IST

Updated : Jul 10, 2019, 7:59 PM IST

வைரமுத்து

சென்னை: "தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.பாலசந்தர் செய்த சாதனைகளை தமிழ்நாடு அரசு ஆவணப்படுத்த வேண்டும்" என்று பாடலாசிரியர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த இயக்குநர் கே. பாலசந்தர். அவரது 90ஆவது பிறந்தநாளை ஒட்டி, அவரிடம் உதவியாளராக இருந்த மோகன் 'கே.பி.90' எனும் நிகழ்ச்சியை சென்னை சாலிகிராமத்தில் நடத்தினார். இதில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், "இயக்குநர் கே. பாலசந்தருக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்றில் நான்தான் ஹீரோ. என் வாழ்வில் நான் ரசித்த, நெகிழ்ந்த, மகிழ்ந்த ஒரு இயக்குநர் என்றால் அது கே. பாலசந்தர்தான். வளரும் இயக்குநர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும். ஒரு நல்ல இயக்குநருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள். கே.பாலசந்தர் இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது" என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, "ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு சமயத்தில் அந்த இசையமைப்பாளரை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் பிரிந்த அந்த இசையமைப்பாளரின் திறமையும், ஆளுமையும் பெரியது. அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசையமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை.

அந்த நிலையில் ஒரு நாள் பாலசந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. திலீப் என்ற புது இசையமைப்பாளர். பாலசந்தரின் மூன்று படங்களுக்கு நான்தான் பாடல் எழுதினேன். பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. அந்த திலீப்தான் ஏ.ஆர்.ரஹ்மான். மீண்டும் களம் எனக்கு வந்தது. திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்தவர் பாலசந்தர். அவரின் சாதனைகளை ஆவணப்படுத்த வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும்" என்றார்.

விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ். தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குநர் பேரரசு, ரமேஷ் கண்ணா, ஆர்.கே. செல்வமணி, ஆர்.பி உதயகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Intro:கே பாலச்சந்தரின் சாதனைகளை தமிழக அரசு ஆவணப்படுத்த வேண்டும் - வைரமுத்து.Body:தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் . இவரின் உதவியாளர் மோகன் கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் சாலிகிராமத்தில் நடைபெற்றது . இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், இயக்குனர் கே பாலச்சந்தருக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படம் நான் தான் ஹீரோ. என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது கே பாலசந்தர் அவர்கள் தான்.

வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.

காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா. கே பாலசந்தர் இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது.

வைரமுத்து பேசும்போது, ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது .

ஏழு ஆண்டுகள் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .
அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .

அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது .

திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்.

பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் என்றார்.

Conclusion:இவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ் தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, ஆர் கே செல்வமணி, ஆர் பி உதயகுமார், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.




Last Updated :Jul 10, 2019, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.